Wednesday, 10 January 2018

வெட்கம் பூசி அமர்ந்தவளுக்கு, பேரின்பத்தையும்,
சுடுகனல் வெயிலில் வறண்ட
மொட்டை நிலத்தை பார்த்தலில்
வேதனையையும்..
யாருமில்லா நடுநிசி இரவில்
வேசிக்கு..
சிறிது ஆசுவாசத்தையும்,..
விலா எலும்பு நோக எடை நகர்த்தி
வருபவனுக்கு எதிர்பார்ப்பையும்..
வீரிட்டு அழும் குழந்தைக்கு
மனக்கீறும் பயத்தையும்...
இன்னும் பலருக்கு ஏதோவொன்றையும்
கொடுத்துச் செல்கிறது...
அந்த ஒரு "தனிமை...!!!"

 சு.இந்துமதி..

No comments:

Post a Comment