அடர்கருகூந்தலில் எட்டிப்பார்க்கும்
ஒற்றை வெள்ளைமுடி தனிமையை
பெருங்கூட்ட சாபத்தில்
பெறும்வேளையில் சில்லிட்ட
சாரல்காற்றில் கண்களில் கசந்த
பசியில் தேநீர் குடிக்க
கசப்பு நாக்கிற்கு இடமாற
தேர்ந்த விதியை திறமையாய்
திட்டி மிச்சம்
வையாமல் மிடற்றை விழுங்குகிறேன்..
சிறுகடியில் ஒருகடி இனிக்க..
முழுத்தேநீருக்கும்
இனிப்பைக்கொட்டி சென்றது..
நாக்கில் நழுவிய எறும்பு..
சு.இந்துமதி, தென்னம்புலம்..
ஒற்றை வெள்ளைமுடி தனிமையை
பெருங்கூட்ட சாபத்தில்
பெறும்வேளையில் சில்லிட்ட
சாரல்காற்றில் கண்களில் கசந்த
பசியில் தேநீர் குடிக்க
கசப்பு நாக்கிற்கு இடமாற
தேர்ந்த விதியை திறமையாய்
திட்டி மிச்சம்
வையாமல் மிடற்றை விழுங்குகிறேன்..
சிறுகடியில் ஒருகடி இனிக்க..
முழுத்தேநீருக்கும்
இனிப்பைக்கொட்டி சென்றது..
நாக்கில் நழுவிய எறும்பு..
சு.இந்துமதி, தென்னம்புலம்..
No comments:
Post a Comment