Wednesday, 10 January 2018

உனக்கும் எனக்குமான ஊடலில் நம்
மௌனங்கள் சத்தமிட்டு அழுகின்றன..

என் அலைபேசியும் தவங்கிடக்கின்றன
உன் அழைப்பினை எதிர்பார்த்து..

கனவுகளும் உன்னைச்சுற்றியே
படையெடுக்கின்றன..

தேநீர் கோப்பைகளும் உன்னை
நிரப்பியே என்னிடம் வருகின்றன..

என் குளிரை  நினைவுகளை மூட்டி
காய்கிறேன்...

என் நீளும் இரவில் சத்தமிட்டு
கத்துகின்றன... மனத்தவளைகள்...

எங்கோ அடர் இரவில்  எனக்கும் சேர்த்து ஓலமிடுகிறது அந்த நாய்.. ....!!!
 


சு.இந்துமதி, தென்னம்புலம்

No comments:

Post a Comment